சிவாஜிராவ் என்ற இளைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகி, இன்று "சூப்பர்ஸ்டார்யாக" அறியப்படுகிற நிலை வரையிலான மாற்றங்களை எத்தனையோ பேர் எத்தனையோ கோணங்களில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்.'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி!. ஆனால், ஒரு சிகரத்தின் எல்லா அங்குலங்களையும் முழுமையாகத் தொட்டு முடித்துவிட்டதாக யாரும் சொல்ல முடியுமா?
ரஜினியின் அழகே அவரது ரசனைதான்! சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஆச்சர்யம் காட்டுகிறார். ஏராளமான புத்தகங்கள் வாசிக்கிறார். நிறைய இசை கேட்கிறார். ரகளையான வாழ்க்கை கொட்டிக் கொடுத்த அனுபவங்களால் நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்பது அவர் பேச்சிலேயே புரிகிறது. சினிமா காட்டும் ஸ்டைல் ஹீரோவுக்கும், எதிரில் அமர்ந்திருக்கிற நிஜ ரஜினிக்கும் ஏகப்பட்ட
வித்தியாசம் .
எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது.
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிமாணங்கள் உண்டு. சார்லி சாப்ளின் அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர், தயாரிப்பாளர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். விகடனில் வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் சுவையான அனுபவத்தொடர். மிகுந்த வரவேற்பு பெற்றது.
1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். இவர் பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பலவற்ரைத் தமது நகைச்சுவை நடிப்பிற்காகப் பெற்றுள்ளார். விகடனில் வந்த நடிகர் வடிவேலு அவர்களின் சுவையான அனுபவத்தொடர். மிகுந்த வரவேற்பு பெற்றது.
குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். சினிமா காரரின் வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இல்லை என்று சொல்பவர்களின் பேச்சை பொய் ஆக்கியது பாலா அண்ணனின் வாழ்க்கை.”இவன் தான் பாலா” தொடர் ஆனந்த விகடனில் வந்தது. நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர். இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்துக்கும், 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.
இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தவர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைப்படக்கலை பயின்றவர். நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தவர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைப்படக்கலை பயின்றவர். நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
Tamil Cinema | |||
No. | Book Title | Author | Download PDF Tamil book |
1 | |||
2 | |||
3 | |||
4 | |||
5 | |||
6 | |||
7 | இயக்குனர் பாலா | ||
8 | |||
9 | |||
10 |
MS சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா Suprabhatam mp3டவுன்லோட் செய்ய -(Sri Venkateswara Suprabhatam by MS Subhalakshmi )
ZIDDU || DEPOSITFILES
(இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து பிடிஎப்- களையும் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.)
3 comments:
romba nalla pathivu..mikka nandri.
@Kumaran
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
i want இவன் தான் பாலா book
Post a Comment
மற்ற பரிசுகளை ஒரு முறை தான் திறக்க முடியும், புத்தகத்தை பரிசாய் கொடுத்தால் பல முறை திறக்கலாம்...